Sunday, October 3, 2010

மனிதா ...!


மனிதா ...
பணத்தைப் போட்டு
பாவம் செய்கிறாய் ...!
செய்த பாவத்திற்கு
பரிகாரம் உண்டியலா....
செய்யப்போகும் பாவத்திற்கு
பரிகாரம் உண்டியலா...!

உண்டியலில்
பணம் போட்டால்
பாவம் தீருமா...?
சபித்தவர்களின்
சாபம் மாறுமா...?


எந்த சாமி
உண்டியல் கேட்டது...?
நீ போடும் பணத்தால்தான்
உயிர் வாழ்கிறேன் என்றது ...?

நீ போட்ட பணத்தால் ..
எத்தனை சாமிகள்
சுவீஸ் கணக்கு வைத்திருக்கிறது
உனக்குத் தெரியுமா ...?

ஓசோன் படலத்தில்
ஓட்டை .....!
உண்டியல் போட்டாலும்
உயிர் வாழ முடியாது ...!

"மதத்தை அழிப்போம்
மரம் வளர்ப்போம் "
கோஷம் போடு ...உன்
குலமும் மிஞ்சும்
குலதெய்வமும் மிஞ்சும்..!

கொட்டிக் கிடக்கிறதா ..பணம் ,
கோவிலில் போடாதே ...,
கோவில் கட்டாதே ...!
மோதல்கள் போதும் ...!

குளம் வெட்டு
கும்பிடுகிறோம் ...!
படிக்க பள்ளி கட்டு ...
பகுத்தறிவைக் கொடு ..
பாதம் தொடுகிறோம் ...!

நம்பிக்கையை விதைத்து
தன்னம்பிக்கையை கொடு ...
நாளைய சமுதாயமாவது
நலம் பெறட்டும் ...!