Thursday, December 15, 2011

மௌனத்தின் மயக்கம் ...!


வயலினிலே வரப்பில்லை
வந்த மழை பெய்யவில்லை ,
வட்டியிலே சோறு இல்லை ,
வாழ்வதற்கு வழி தெரியவில்லை !
இது தந்தையின் ஏக்கம் ....!

மானத்துக்கு சேலையில்லை ,
கூரையிலே ஓலையில்லை ,
விழிகளுக்கு ஈரமில்லை ,
இமைகளுக்கு வேலையில்லை ,
இது தாயின் துக்கம் ....!

கூந்தலிலே என்னையில்லை ,
கொண்டையிலே பூவுமில்லை ,
கூடிச் சேர மனமுமில்லை ,
கொண்டவனுக்கோ ஆசையுமில்லை .,
இது தாரத்தின் ஏக்கம் ....!

வாரிக் கொடுக்க வசதியில்லை ,
வான் நிலவும் சிரிக்க வில்லை ,
வார்த்தைக்கு அர்த்தமில்லை ,
வாழ்க்கையோ புரியவில்லை ....!
இது என் துக்கம் ....!

வாழ்வினில் ஏக்கம் -இங்கே
பாதியில் தூக்கம் !
வசந்தமோ துக்கம் -இங்கே !
வறுமையோ பக்கம் !
நட்பிடம் மஞ்சம் -இங்கே
உறைவிடம் வஞ்சம் !
உள்ளத்தில் கலக்கம் -இங்கே
உண்மைக்கு வெட்கம் !
மௌனத்தின் மயக்கம் -இங்கே
மாறி விட்டால் மணக்கும் ..!