Saturday, August 7, 2010

சொல் பாவையே ...சொல்..!


பார்க்க மட்டுமே தெரிந்த

என் கண்களுக்கு ,

கண்ணீரை வரவழைக்க

கற்றுக் கொடுத்தவளே ...!


என் காதலை

காகிதத்தில் எழுதினேன்- அதில்

கப்பல் செய்து

காட்டாற்றில் விட்டு விட்டாய் !

கப்பல் மூழ்கி விடலாம்..என்

காதல் மூழ்காது...!


நான்

காணும் கனவுகளுக்கு

கப்பம் கட்டிக்கொண்டு இருக்கிறேன்..

நீ

வராமல் இருந்து விடுவாயோ..

என்ற பயத்தில்...!


நம் காதலுக்கு எதிரி யார்...

காசா..கடவுளா...

மதமா...ஜாதியா..

சொல் பாவையே சொல்...!

2 comments:

  1. ''..நான்


    காணும் கனவுகளுக்கு


    கப்பம் கட்டிக்கொண்டு இருக்கிறேன்..''
    வாழ்த்துகள் தொடருங்கள்.
    வேதா. இலங்காதிலகம்.
    http://kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  2. அன்புச் சகோதரிக்கு வணக்கம் ...என் வலைக்கு வந்ததே ,,பாக்கியம் ..! தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ ..வாழ்க வளமுடன் !

    ReplyDelete