Wednesday, September 14, 2011

காதல் பூமி ..!

வா....அன்பே ....!

களங்கமில்லா நிலவுக்குள்

காலடி வைத்திடுவோம் ...!

நித்தமொரு காதல் செய்திடுவோம் ..

புத்தம் புது வாழ்வு வாழ்ந்திடுவோம் ...!

காதலை மறுக்கும்

பூமிதனை மறந்திடுவோம் ....,

காதலின் சின்னமாய்

நிலவுக்குள் வாழ்ந்திடுவோம் ...!

பழமைகளை கனலால் பொசுக்கிடுவோம் ...

புதுமைகளை நிலவுக்குள் பயிரிடுவோம் ...!

தோன்றும் துன்பங்களை தூக்கிலிடுவோம் ...

கிடைக்கும் இன்பங்களை ருசித்திடுவோம் ..!

மரணமில்லா வாழ்வு வாழ்ந்திடுவோம் ...

மறையும் வரை அன்புக் காதல் செய்திடுவோம் ...!

காதலின் கண்ணீரை துடைத்திடுவோம் ...

காதலில் தோல்வி இல்லை என்றாக்கிடுவோம் ...!

மோதல்களில்லா சமுதாயம் உருவாக்கிடுவோம் ...

ஜாதியற்ற விதைகளை விதைத்திடுவோம் ...

வரதட்சனையை காதலால் வதை செய்வோம் ..!

வாங்குவோரை துவம்சம் செய்வோம் ..!

கனவு மாளிகை ஒன்று கட்டுவோம் ....

உண்மைக் காதலர்களை அதில் குடியேற்றுவோம் ...!

புது உலகம் ஒன்றை செதுக்கிடுவோம் ....

"காதல் பூமி " எனப் பெயரிடுவோம் ...

வா...அன்பே ...

களங்கமில்லா நிலவுக்குள்

காலடி வைத்திடுவோம் ...!

No comments:

Post a Comment