Friday, December 16, 2011

நண்பனே ...!


விழி நீரைத் துடைத்திடு ,
நேர் கொண்டு பார்த்திடு ,
விடிகின்ற பொழுதெல்லாம்
நமக்கென்று பாடிடு !

புன்னகையை சூடிடு ,
பொறுமையுடன் விளங்கிடு ,
சுமைகள் யாவும் தூசியென
சொந்தங்களை அணைத்திடு !

கயவர்களை விரட்டிடு ,
கடமைதனை போற்றிடு ,
தூங்கியது போதுமென்று
வீறுகொண்டு எழுந்திடு !

அரசியலை அழித்திடு ,
அமைதியனை விதைத்திடு ,
அஹிம்சை ஒன்றே போதுமென்று
அறப்போர் நடத்திடு !

தோல்விகளை களைந்திடு,
உறுதியுடன் உழைத்திடு ,
நேர்மை கொண்ட நெஞ்சுக்கு
வெற்றியென முழக்கமிடு !

********************************

No comments:

Post a Comment