
இளைஞனே ...
காதல் செய்....
காதல் வேண்டும்...!
தோற்றுப் போனால்
துவளாதே...!
தோற்றலும்
ஜெய்த்தலும்
காதலின் இலக்கணம்...!
திரும்பி பார்...
சரித்திரர்களின்..
சாம்ராஜ்யங்கள்
சாம்பலாகி...மண்ணோடு ...!
தோல்வியின்றி
வெற்றியில்லை ..
காதலிலும்தான் ...!
இலையுதிர்
காலங்களில்..
மரித்துப் போவதில்லை ...
மரம்...!
"இதயத்தில் இடமில்லை"
என்பதற்க்காக ..
"கல்லறையில் "
இடம் தேடலாமா...!
தூங்கினவன்
எழுந்ததாக ...
வாழ்ந்தோர்
சொன்னதுன்டோ ...!
"தாஜ்மஹால்"
மனைவிக்காகத்தான்
கட்டினான்..!
காதலிக்காக
அல்ல...!
அம்பிகாவதி..அமராவதி .
பார்வதி ..தேவதாஸ் ...
லைலா ..மஜ்னு ...
சலீம் ..அனார்க்கலி ...
காதலுக்கு ..மரியாதை
செய்தவர்கள்...!
காதலோடு ...
வாழ்ந்தார்களா ...!
"மூன்று முடிச்சு "
முப்பாலையும்
உனக்குணர்த்தும் ...!
அறிவாய்..
அப்போது ...
உண்மைக்காதலை ...!
சாதிக்கும்
நேரத்தில்...
சோதிக்கும்
காதலால்..
இலட்சியங்கள் ...
சவக்கிடங்கில்...!
நீ...
வாழவேண்டும் ..
எந் நாட்டு ...இளைஞனே ..!
இது ...
கதையல்ல ...
கவிதையுமல்ல ...!
உன்னிடம்
கேட்கும் ...
வரம்...!