
பார்க்க மட்டுமே தெரிந்த
என் கண்களுக்கு ,
கண்ணீரை வரவழைக்க
கற்றுக் கொடுத்தவளே ...!
என் காதலை
காகிதத்தில் எழுதினேன்- அதில்
கப்பல் செய்து
காட்டாற்றில் விட்டு விட்டாய் !
கப்பல் மூழ்கி விடலாம்..என்
காதல் மூழ்காது...!
நான்
காணும் கனவுகளுக்கு
கப்பம் கட்டிக்கொண்டு இருக்கிறேன்..
நீ
வராமல் இருந்து விடுவாயோ..
என்ற பயத்தில்...!
நம் காதலுக்கு எதிரி யார்...
காசா..கடவுளா...
மதமா...ஜாதியா..
சொல் பாவையே சொல்...!