Friday, December 16, 2011

வெற்றி ...!

பத்துப் பங்களா ...

பறக்கும் கார்கள் ...

பணிவிடை ஆட்கள் ...

பலகோடிப் பணம் ...

வெற்றியா ..?

சந்தோசத்தை தொலைத்து விட்டு

சான்ட்ரோ காரில் சென்றால்

வெற்றியா ..?

நித்தம் ...

உனைக் கண்டதும்

பிள்ளைகளின் முகத்தில்

தோன்றும் புன்னகை ....வெற்றி ,

வீட்டினுள் நுழைந்ததும் .

கட்டியவள் காட்டும் பரிவு ...வெற்றி .

பசியென்று வந்தோர்க்கு

உணவிட்டு அனுப்பினால் ...வெற்றி .

"இவன் என் மகன் ".என

பெற்றோர்கள் மனம் குளிர்ந்தால் ...வெற்றி .

எல்லாவற்றுக்கும் மேலாக ...

நீ

நிம்மதியாக தூங்கி எழுந்தால்

அதுவே உண்மையான வெற்றி ..!

No comments:

Post a Comment