Friday, December 16, 2011

இப்படிக்கு மனசாட்சி ...!


எத்தனை முறைதான் ...எனை

அடகு வைப்பாய் ...!


நானில்லாமல் ...உன்னால்

நல்லதெது ...

தீயதெது ...

பகுத்தறிய முடியுமா ...நீ

நல்லவனாவதும்

தீயவனாவதும் என்னாலல்லவா ...!


எனைத் துறந்து ...

எதை சாதிக்கப் போகிறாய் ...

சாதிக்கத்தான் முடியுமா...?


செல்லும் பாதை ...

தீயதெனில் ..

திசை திருப்பி விடுபவன்

நானல்லவா ...!


விதையின்றி ...செடியா ...

நானின்றி நீயா ...!


உன் சுய மரியாதை ...

நானல்லவா ....!

இழந்தால் ...

நீ ...நீயல்லவே...!


மனிதனாவதும் ...

"மா"மனிதனாவதும்

என்னாலல்லவா ...!


நானுடனிருந்தால்

"நீதிபதி" நீ..யல்லவா ...!

இல்லையெனில் ...நீ வெறும்

"சாட்சி"..தான் ...!

No comments:

Post a Comment