Friday, December 16, 2011

எழுந்து வா ...!


ஒரு தீக்குச்சியின் வெப்பத்திலே

கனலாகும் உலகமிது ...!

காற்றை சுவாசிக்க மறந்தாலே

மடிந்து போகும் உடலிது ...!


தூக்கமும் ஒரு வகை மரணம்தான் ,

எழுந்தால்தான் நம்பும்

இவ்வுலகம் ...நீ

இறக்கவில்லையென்று ...!


விதையின் வேலை

வேர் விடுவது ..விருட்சமாவது .!

பிறப்பின் சூட்சமம்

வாழ்வது ...வாழ்ந்து காட்டுவது ...!


உன் பார்வையில்தான்

கனல் கக்கும் சூரியனும்

குளுமை தரும் நிலாவும் .

வாழ்வின் சூட்சமும் இதுவே ...

துன்பமும் ...இன்பமும் !


துன்பமின்றி ...இன்பம்

எப்போதும் ..எங்கேயும் இல்லை ...!

எழுந்து வா......


இன்னும் அதிக துன்பப்படுவோம் ....

துன்பத்திலே ....

இன்பம் காண்போம் ...!

1 comment:

  1. “தூக்கமும் ஒரு வகை மரணம்தான், எழுந்தால்தான் நம்பும் இவ்வுலகம் ...நீ
    இறக்கவில்லை யென்று !” என்ற வரிகளை மிகவும் ரசித்தேன். ஏன் எழுதுவதை நிறுத்திவிட்டீர்கள்?

    ReplyDelete