Thursday, January 12, 2012

இதுதான் காதலா....?


நீ பார்த்த பார்வை

திசை மாறிப் போனதே ...!


பேசிய வார்த்தைகள்

தடம் மாறிப் போனதே ...!


என்னாசைக் கனவுகள்

ஓடும் நீரோடு போனதே ...!


உன்னோடென் வாழ்வு

கனவாகிப் போனேதே ...!


நீ தொட்ட மேனி

கனலாய் ஆனதே...!


உனைக் கண்ட என் விழிகள்

குருடாய் ஆனதே ...!


உன் தடம் பார்த்த பாதங்கள்

புண்ணாகிப் போனதே...!


யார் கொடுத்த சாபம்

நிஜமாய் ஆனதே ...!


நான் கொண்ட ஆசைகள்

கணிமரமாய் நின்றதே...!


விதி வந்து ஆசையை

வேரோடு சாய்த்ததே ...!


வேறொருவனை நினைக்க

இனி மனம் இடம் தருமோ ...!


நீயென்ன குற்றம் செய்தாய்

என மனம் ஆறுதல் கூறுமோ ...!


காலங்கள் எனைத் தேற்றுமோ ...

ஆசைகள் மீண்டும் துளிர் விடுமோ ...!


பொருளில்லா இடத்தில்

நல் பெண்மையில்லையா ...!


புரிந்து கொண்டு நடப்பர்

உலகில் யாருமில்லையா ...!

No comments:

Post a Comment