Friday, December 16, 2011

வெற்றி ...!

பத்துப் பங்களா ...

பறக்கும் கார்கள் ...

பணிவிடை ஆட்கள் ...

பலகோடிப் பணம் ...

வெற்றியா ..?

சந்தோசத்தை தொலைத்து விட்டு

சான்ட்ரோ காரில் சென்றால்

வெற்றியா ..?

நித்தம் ...

உனைக் கண்டதும்

பிள்ளைகளின் முகத்தில்

தோன்றும் புன்னகை ....வெற்றி ,

வீட்டினுள் நுழைந்ததும் .

கட்டியவள் காட்டும் பரிவு ...வெற்றி .

பசியென்று வந்தோர்க்கு

உணவிட்டு அனுப்பினால் ...வெற்றி .

"இவன் என் மகன் ".என

பெற்றோர்கள் மனம் குளிர்ந்தால் ...வெற்றி .

எல்லாவற்றுக்கும் மேலாக ...

நீ

நிம்மதியாக தூங்கி எழுந்தால்

அதுவே உண்மையான வெற்றி ..!

மல்லிகாவின் திருமணம் --சிறுகதை


" மச்சானாப் பாத்திங்களா ..." பாட்டு சப்தத்தோடு ..கல்யாண மண்டபம் களை கட்ட தொடங்கியது ...!விடிந்தால் திருமணம் ...எல்லோரும் ஆளுக்கொரு வேலையை கையில் எடுத்துக் கொண்டு பம்பரமாய் சுழல ..பெண்ணின் தந்தை கனகசபை மட்டும் இறுக்கமாக ..மனதில் மகிழ்ச்சியின்றி எதையோ சிந்தித்த வண்ணம் அமர்ந்திதிருந்தார்...!

மல்லிகா,அழகானவள் , ..திறமையுள்ளவள் . தன் ஒரே மகளை பணக்கார இடத்தில்தான் முடிக்க வேண்டும் என்ற ஆசையில் ...பக்கத்து ஊரில் டாக்டராக பணிபுரியும் சுதாகர் கிடைத்தார் ..சுதாகர் அம்மா பிள்ளை ..!மாப்பிள்ளை பார்க்க போனபோது ..சுதாகரின் அம்மா "என் மகனுக்கு மாவட்டக் கலெக்டர்வீட்டுல பொண்ணு கொடுக்க தயாரா இருக்காங்க ..அவுங்க கொடுக்குற வரதட்சனையை ..நீங்க கொடுக்கத் தயாரா இருந்தா நாங்க உங்க பெண்ணை என் பயனுக்கு கட்டிக்கிறோம் "என்று சொல்ல , கனசபையோ .." எனக்கு ஒரே பொண்ணு ..அவளுக்காக எதையும் செய்வேன் ..நீங்க கேட்ட எல்லா வரதட்சனையும் கொடுத்துடுறேன் ' எனச் சொல்லி ..சம்மதம் பேசி வந்து விட்டார் ..! அம்மாவும் பொன்னும் "இது ரொம்ப பெரிய இடம் ..அவுங்க கேட்ட வரதட்சணை கொடுக்க முடியாது " என எவ்வளவோ சொல்லி பார்த்தார்கள் ..அதட்டி வாயடைத்து விட்டார்...!

மாப்பிள்ளை வீட்டார் கேட்ட எல்லாவற்றையும் ஏற்பாடு செய்து விட்டார் ..ஒன்றே ஒன்றைத்தவிர ..கார் ..எங்கெல்லாமோ அலைந்தார் பணம் கிடைக்கவில்லை ..விடிந்தால் கல்யாணம் ..என்ன செய்வது எனத் தெரியாமல் கலங்கிப்போய் அமர்ந்தித்ருக்கிறார் ...சுவரோடு சாய்ந்து ..!

************************************************************************************************

"கடைசியில் பணக்கார புத்தியை காண்பித்து விட்டானே ..என் மகனுக்கு என்ன குறைச்சல் ..பணம் இல்லை.. மத்ததில் அந்த டாக்டர விட ஆயிரம் மடங்கு உசத்தி ." அடுப்படியில் சமையல் செய்து கொண்டே புலம்பிக் கொண்டிருந்தாள் வேதவள்ளி ...கனசபையின் ஒன்றுவிட்ட தங்கை .,கதிரவனின் அம்மா..!

"அம்மா புலம்புரத நிப்பாட்டு, ..பெத்தவங்களுக்கு தெரியாதா ..யார் யாருக்கு எங்கேன்னு இருக்கோ அங்கேதான் அமையும் "

"அது சரிடா ..அவ்வளவு பணத்துக்கு எங்கேடா போவான் ..அதுவும் காரு வேற வாங்கனும்மாம்ல .."

"ஆமம்மா ..இந்தக் கல்யாணத்தில மல்லிகாவுக்கும் ..அத்தைக்கும் கொஞ்சம் கூட இஷ்டம் இல்லை ..மாமாவின் பிடிவாதக் குணத்துக்கு முன் அவர்களின் வாதம் செல்லுபடியாகவில்லை "

"அடப்பாவமே ..ம்ம் ..மல்லிகா நம்ம வீட்டுக்கு வந்து விளக்கு ஏத்துவான்னு நினைச்சேன் ...:புலம்பிக்கொண்டே ...சமையலில் ..மும்மரமானாள் .

**********************************************************************************************

கல்யாண மண்டபம் களை கட்டத் தொடங்கி இருந்தது ..உறவினர்கள் வருகையால் மண்டபம் நிரம்பி வழிந்தது ..மாப்பிள்ளை வீட்டாரும் வந்தாயிற்று.....! கனகசபை ..மெதுவாக மாப்பிள்ளை அறையை தட்டினார் ..

"வாங்க சம்பந்தி.. உள்ளே வாங்க ....என்ன .முகம் ஒரு மாதிரி இருக்கு ..நாங்க கேட்டது எல்லாம் ரெடிதானே?

"எல்லாம் ரெடிதான் சம்பந்தி ..ஆனா ..காரு...ஒரு மூணு மாசம் டைம் கொடுங்க கண்டிப்பா வாங்கி கொடுத்துடுறேன் .."

"என்னது காரு இப்போ இல்லையா ..அன்னைக்கு எல்லாம் ரெடின்னு சொன்னிங்களே ..மண்டபத்துக்கு வந்துட்டா கல்யாணம் எப்படியும் நடந்துரும்னு நினைப்பா ..இங்கே கார் நிக்காம எம்மகன் உம் பொண்ணு கழுத்துல தாலி காட்டமாட்டான் .."

"இல்லை சம்பந்தி ..அப்படியெல்லாம் சொல்லாதிங்க ..என் மானமும் என் பொண்ணு வாழ்க்கையும் ..உங்க கையில்தான் இருக்கு சம்மந்தி ..உங்க காலைப் புடுச்சு ..."

"அதெல்லாம் முடியாது ..டேய் ..எல்லோரும் கிளம்புங்க .."கிளப்பினார் .

சப்தம் கேட்டு கூட்டம் கூடியது ..

கதிரவன் செய்தி அறிந்து வேகமாக வந்து ..மாப்பிள்ளையிடமும் ,சம்மந்தியிடமும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தான் ..ம்ஹூம் ..! இவற்றை எல்லாம் பார்த்து..கேட்டுக் கொண்டிருந்த மல்லிகா வேகமாக வந்தாள் ..நேராக மாப்பிள்ளையின் அப்பாவை பார்த்து . ." எங்க அப்பா காரு வாங்கி கொடுக்க மாட்டார் ..யாரு காரு வாங்கிக் கொடுக்குரான்களோ ..அங்கே போய் உங்க மகனை தாலி கட்டச் சொல்லுங்க ....இதுக்கு மேல எதுவும் பேசாதிக ..அப்புறம் வரதட்சணை கேட்டாகன்னு போலீசில் கம்ளைன்ட் கொடுத்துருவேன் " என்று சொன்னதும் மாப்பிள்ளைக் கூட்டம் கிளம்பியது ..!வந்திருந்த உறவினர்களைப் பார்த்து .."யாரும் திரும்பி போக வேண்டாம் .. என் கல்யாணம் நடக்கும்... இதே முகர்த்தத்தில் ..இருந்து ஆசிர்வதித்திட்டு செல்லுங்கள் ...."அப்பாவின் பக்கம் திரும்பி ..

"அப்பா ..கல்யாணம்கிறது எவ்வளவு உன்னதமான விசையம் .. இரண்டு ஜீவன்களின் வாழ்க்கை ..!வரதட்சணை என்ற பெயரில் பணப்பரிமாற்றம் செய்ய இது தொழில் இல்ல.. அப்பா..உங்க வரட்டுக் கவுரவத்தாலே என்ன நடந்ததுன்னு பாத்திகள ..பெத்த பொண்ணு கிட்ட மாப்பிள்ளை பிடிச்சுருக்கா ன்னு ..கேட்டிகளா ..அவளிடம் கேட்கணும்னு ஏன் பெத்தவங்களுக்கு தோன மாட்டேங்குது ,..பெத்த பொண்ணு நம்மை பேச்ச மீற மாட்டா என்ற நம்பிக்கை ..ஆமாம் ..நாங்க மீற மாட்டோம் ..எங்களுக்கு பிடிக்குதோ ..பிடிக்கலையோ ..நீங்க சொல்ற மாப்பிள்ளைக்கு கழுத்த நீட்டி காலம் முழுவதும் வாழுறோமே ..எதுக்காக ..பொம்பளப் புள்ளன்னு தெரிஞ்சும் கள்ளிப்பாலை கொடுக்காம ..எங்களை சீராட்டி ..பாராட்டி வளர்த்திகளே அதுக்காக ..!

பெத்தவங்க நினைக்கிறிங்க ..பணக்கார வீட்டு மாப்பிள்ளைன்னா பொண்ணு சந்தோசமா இருப்பான்னு ..பணம் முக்கியமில்லை ...ஐம்பது ரூபா கொண்டுவந்து அன்பா கொடுத்தா அதிலையும் குடும்பம் நடத்துறவதான் பொம்பள ..இது உங்களைப்போல அப்பாவுகளுக்கு புரிய மாட்டேங்குது ..!

வரதட்சணை ஒழியனும் ..ஒழியனும்னு வாய் கிழிய கத்தினா மட்டும் போதுமா..உங்களைப் போல பணக்காரன்களே இப்படி அள்ளிக் கொடுத்தா ..வரதட்சணை எப்படி ஒழியும் ..நான் என்ன குருடா ..செவிடா .,அங்கம் ஏதும் ஊனமா ..படிப்பு இல்லையா ..அழகுதான் இல்லையா ..?வரதட்சணை வாங்காம கல்யாணம் பண்ண இந்தக் கால இளஞர்கள் ரெடியாகத்தான் இருக்குறார்கள் ...ஆனா நீங்கதான் குடுக்குறதை நிப்பாட்ட மாட்டேன்குரிங்க ..!

இதோ நிக்கிறாரே ..கதிரவன் ..இவருக்கு என்னப்பா குறை ..பணம் இல்லை ..அதைத்தவிர அந்த டாக்டரை விட ஆயிரம் மடங்கு நல்லவர் .உங்கள எது தடுத்தது ..வரட்டுக் கவுரவம் ..பணக்கார வீட்டு சம்பந்தம் வச்சுருக்கேன்னு சந்தோசப்பட்டு..நாலு பேருகிட்ட சொல்லிக்கலாம் .அதுதானே...வாழப்போற எங்க சந்தோசம் முக்கியமா..உங்க சந்தோசம் முக்கியமா..? ..முன்னே மாதிரி இல்லப்பா ..கழுத்துல தாலியை வாங்கிக்கிட்டு ..காலம் பூரா காயப்பட்டு வாழ நாங்க தயாரா இல்லை ..பணத்தை பொண்ணுக விரும்புறது இல்லப்பா ..பிறந்த வீட்டுல உள்ள எல்லாத்தையும் மறந்து ..புகுந்த வீட்டுல ஒரு அரவணைப்பு ..அன்பு .பாசம் கிடைக்கலைன்னா ..நீங்க கோடிக்கணக்கான பணம் கொடுத்தாலும் வீண்தான் அப்பா ..என்ன இவ்வளவு பேசுறாளே பொண்ணு ன்னு யாரும் நினைக்கவேண்டாம் ..பேச வேண்டிய நேரத்துல பேசாம இருக்குறதால்தான் பெண்ணுக்கு பிரச்சனையே பேசணும் ..பேசவேண்டிய நேரத்துல பேசியே ஆகணும் .."

எல்லோரும் கைதட்டி ஆர்ப்பரிக்க ..கனகசபை ..மகிழ்ச்சி ததும்ப ..கதிரவனின் கரம் பற்ற ....

வந்திருந்த அனைவரும் ..மலர்தூவி வாழ்த்த ..மல்லிகா-கதிரவன் திருமணம் இனிதே நடந்தது ..! என்ன கிளம்பிட்டிங்க ..இருந்து சாப்பிட்டுத்தான் போகணும் எல்லோரும் ...சுபம் .

குறிப்பு --இக்கதையில் வரும் சம்பவங்கள் யாவும் கற்பனையே ..!

நண்பனே ...!


விழி நீரைத் துடைத்திடு ,
நேர் கொண்டு பார்த்திடு ,
விடிகின்ற பொழுதெல்லாம்
நமக்கென்று பாடிடு !

புன்னகையை சூடிடு ,
பொறுமையுடன் விளங்கிடு ,
சுமைகள் யாவும் தூசியென
சொந்தங்களை அணைத்திடு !

கயவர்களை விரட்டிடு ,
கடமைதனை போற்றிடு ,
தூங்கியது போதுமென்று
வீறுகொண்டு எழுந்திடு !

அரசியலை அழித்திடு ,
அமைதியனை விதைத்திடு ,
அஹிம்சை ஒன்றே போதுமென்று
அறப்போர் நடத்திடு !

தோல்விகளை களைந்திடு,
உறுதியுடன் உழைத்திடு ,
நேர்மை கொண்ட நெஞ்சுக்கு
வெற்றியென முழக்கமிடு !

********************************

Thursday, December 15, 2011

மௌனத்தின் மயக்கம் ...!


வயலினிலே வரப்பில்லை
வந்த மழை பெய்யவில்லை ,
வட்டியிலே சோறு இல்லை ,
வாழ்வதற்கு வழி தெரியவில்லை !
இது தந்தையின் ஏக்கம் ....!

மானத்துக்கு சேலையில்லை ,
கூரையிலே ஓலையில்லை ,
விழிகளுக்கு ஈரமில்லை ,
இமைகளுக்கு வேலையில்லை ,
இது தாயின் துக்கம் ....!

கூந்தலிலே என்னையில்லை ,
கொண்டையிலே பூவுமில்லை ,
கூடிச் சேர மனமுமில்லை ,
கொண்டவனுக்கோ ஆசையுமில்லை .,
இது தாரத்தின் ஏக்கம் ....!

வாரிக் கொடுக்க வசதியில்லை ,
வான் நிலவும் சிரிக்க வில்லை ,
வார்த்தைக்கு அர்த்தமில்லை ,
வாழ்க்கையோ புரியவில்லை ....!
இது என் துக்கம் ....!

வாழ்வினில் ஏக்கம் -இங்கே
பாதியில் தூக்கம் !
வசந்தமோ துக்கம் -இங்கே !
வறுமையோ பக்கம் !
நட்பிடம் மஞ்சம் -இங்கே
உறைவிடம் வஞ்சம் !
உள்ளத்தில் கலக்கம் -இங்கே
உண்மைக்கு வெட்கம் !
மௌனத்தின் மயக்கம் -இங்கே
மாறி விட்டால் மணக்கும் ..!

Thursday, December 8, 2011

எங்கே அவள் ...?


அவள் அணைப்பில் கவிழ்ந்திருந்தேன் ,
முதுகில் முகம் உரச 'அத்தான்" என்றழைத்தாள் !
புரண்டு படுத்தேன் ,மார்பில் முகம் புதைத்தாள் !

மார்பு ரோமத்தை கைகளால் வருடியபடியே
'அன்பரே,ஏனிந்த மௌனம் ?'என்றாள் !
காதலாள் அணைப்பினில் காலம் கடக்கையிலே ,
வாய் வார்த்தைகட்கு இங்கென்ன
வேலையென்றேன் ,மௌனமாய் சிரித்தபடி
"கொடுப்பதற்கு எதுமுண்டோ " என்றேன் !
சத்தமின்றி யொரு முத்தம் தந்தாள் !

காலம் கடக்கையிலே முடிவுரையின் முன்னுரையை
துவக்க நான் முனைந்த போது ..செவிப்பறையை
கிழியும்படி 'பாலு ' என்ற குரல் கேட்டு
ஒரு கனம் திடுக்கிட்டேன் !ஆடைகளை சரி செய்து
கதவின் தாழ்விலக்கி வாசலிலே விழி வைத்தேன் ,
அழைத்தார் யாரும் காண வில்லை ,அருகேயும் ஆளில்லை !
இங்கிதம் தெரியாமல் இந்நேரம் குரல் கொடுத்த
நபரை நான் வைது கொண்டே ...விட்ட
இடந் தொடர விரைவாய் நான் முயன்ற போது ,
அறையே அதிரும்படி மீண்டும் அதே குரல் !
அறைக்குள்ளையே குரல் கேட்க ,
இருவருமே அதிர்ந்திட்டோம் !அழைத்தவரெவர்
என்பது போல் அவளை நான் நோக்க ,
அத்தானின் பெயர் சொல்லி நான் அழைப்பேனா ?
என்பதுபோல் மறுப்பாய் தலை அசைத்தாள் !

நிலை குலைந்த ஆடைகளை பயத்துடனே சரி செய்து ,
கதவிடுக்கில் கண்பதித்து நோக்கினேன் ,
சன்னலையும் மெல்லத் திறந்து பார்த்தேன் ,
ஆட்களை காணவில்லை ....காதலாள்
கட்டிலின் அடியிலும் தேடினாள் ,எவருமிலர் !
அதிர்ச்சியாய் .உறைந்த போது ,வெகுவாய்
பழக்கப்பட்ட அதே குரல்
'பாலு 'என்று எதிரொலிக்க திடுக்கிட்டுக்
கண் விழித்தேன் ,எதிரே என்னறைத் தோழன் ராஜா ,
மணியோ ஐந்தடிக்க ஐந்து நிமிடமே உள ,
இன்னும் ஏனிந்த உறக்கம் ?உடனே விழித்தெழு ,
விரைவாய் செயல் பட்டு வேலைக்குச் செல் என்றான் !

குழப்பமாய் சுற்றும் முற்றும் பார்த்து நோக்கியபடியே
காதலாள் காணவில்லை ,அதிர்ச்சியால் சிலையானேன் ,
கனவை நோவதா? எழுப்பிய நண்பனை நோவதா?
நினைவுகள் அசைபோட்டு மெல்லச் சிரித்தேன் .
காலையிலயே பல்லிளிக்கும் காரணம் கேட்டான் நண்பன் .
என்ன சொல்ல ?மீண்டும் சிரிப்பை பதிலாக்கினேன் ,
ஏதோ ஆகி விட்டதென்று கேட்பதையும் நிறுத்தி விட்டான் !
வெட்கம் முகத்தில் வர 'கனவை 'நான் நொந்து கொண்டே
பற்குச்சில் பற்பசையை பக்குவமாய் அழுத்தி விட்டு .,
குளியல் அறை நோக்கி ..விரைவாய் நடை போட்டேன் !!

'



Wednesday, September 14, 2011

காதல் பூமி ..!

வா....அன்பே ....!

களங்கமில்லா நிலவுக்குள்

காலடி வைத்திடுவோம் ...!

நித்தமொரு காதல் செய்திடுவோம் ..

புத்தம் புது வாழ்வு வாழ்ந்திடுவோம் ...!

காதலை மறுக்கும்

பூமிதனை மறந்திடுவோம் ....,

காதலின் சின்னமாய்

நிலவுக்குள் வாழ்ந்திடுவோம் ...!

பழமைகளை கனலால் பொசுக்கிடுவோம் ...

புதுமைகளை நிலவுக்குள் பயிரிடுவோம் ...!

தோன்றும் துன்பங்களை தூக்கிலிடுவோம் ...

கிடைக்கும் இன்பங்களை ருசித்திடுவோம் ..!

மரணமில்லா வாழ்வு வாழ்ந்திடுவோம் ...

மறையும் வரை அன்புக் காதல் செய்திடுவோம் ...!

காதலின் கண்ணீரை துடைத்திடுவோம் ...

காதலில் தோல்வி இல்லை என்றாக்கிடுவோம் ...!

மோதல்களில்லா சமுதாயம் உருவாக்கிடுவோம் ...

ஜாதியற்ற விதைகளை விதைத்திடுவோம் ...

வரதட்சனையை காதலால் வதை செய்வோம் ..!

வாங்குவோரை துவம்சம் செய்வோம் ..!

கனவு மாளிகை ஒன்று கட்டுவோம் ....

உண்மைக் காதலர்களை அதில் குடியேற்றுவோம் ...!

புது உலகம் ஒன்றை செதுக்கிடுவோம் ....

"காதல் பூமி " எனப் பெயரிடுவோம் ...

வா...அன்பே ...

களங்கமில்லா நிலவுக்குள்

காலடி வைத்திடுவோம் ...!

கானா ..பாட்டு !

"மீனு விக்குற கண்ணம்மா ...

கெண்டைமீனு விலை என்னம்மா ..

பார்த்ததுமே மயங்கிப்புட்டேன்..

பார்த்து விலை சொல்லம்மா ...!"

"நோட்டம் பார்க்கும் செல்லைய்யா..

கெண்டைமீனு விலை ஜாஸ்திய்யா ...

வாங்க சக்தி உனக்கில்லைய்யா ..உன்

இடுப்புக்கயிறை இருக்கிக்கிட்டு ..

வந்த வழியே செல்லைய்யா ...!"

***

"பூவு விக்கிற பொன்னம்மா ...

பூவு விலை என்னம்மா ..

கூடையுடன் வாங்கிக்கிறேன் ..என்னை

புரிஞ்சுக்கிட்டா என்னம்மா ...!"

"வாசம் பிடிக்கும் செல்லைய்யா ...என்

மச்சான் வந்திடுவார் செல்லையா ...

உன்னையும் என்னையும் பார்த்துப் புட்டா

உயிரை விட நீ ரெடியா ..."

***

மோரு விக்குற குருவம்மா ..

தாகம் எனக்கு ரொம்பம்மா ...

காசெவ்வளவு சொல்லம்மா ..

கொடுத்துடுறேன் மொத்தம்மா ..."

"விவரமான ஆளைய்யா ...நீ

பாவமான ஆளைய்யா

வித்துப் போச்சு மோரைய்யா ...

காத்து இருக்கேன் நாளைய்யா ...

கவலை வேண்டாம் செல்லையா ...!"

***

விறகொடிக்கும் வீரம்மா ...

வீட்டுப் பக்கம் வாயேம்மா ...

நாட்டுக்கோழி குழம்பு வச்சு

நாளு ரொம்ப ஆச்சும்மா ..."

"நாட்டுக்கோழி குழம்பு வச்சு

நாளு நாளா தூங்கலையே, .எம் புருசன்

நாளு நாளா தூங்கலையே ..

கூசாம கூப்பிடுரையே..

குசும்பு உனக்கு ரொம்பைய்யா ..!.

உன் அத்த மக அஞ்சுகம்

உட்கார்ந்திட்டா நேத்தைய்யா ...

ஊரெல்லாம் பேசுதைய்யா ...

ஊரைக்கூட்டி சொல்லைய்யா ...

தாலி ஒன்ன கட்டைய்யா ..உனக்கு

வேலி ஒன்னு போடய்யா ...

நாட்டுக் கோழி குழம்பு வச்சு...

நாசூக்கா சாப்பிடைய்யா...தினம்

நாசூக்கா சாப்பிடைய்யா ,,,!"